கலைஞர் வேட்புமனு தாக்கல் செய்தார்
சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் கலைஞர் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து அத்தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று 14.45 மணியளவில் திருவாரூர் தொகுதியில் கலைஞர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக அவர் காட்டூரில் இருக்கும் தனது தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்
No comments:
Post a Comment