வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



15/01/2013


தி.மு.க. சார்பில் 1,300 பேருக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகள் கனிமொழி எம்.பி. வழங்கினார்
  • 95–வது தி.மு.க.

சென்னை திருவல்லிக்கேணி 95–வது வட்ட தி.மு.க. சார்பில் பொங்கல் பண்டிகை நலத்திட்ட விழா சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு வி.எம்.தெருவில் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாட்டினை திருவல்லிக்கேணி 95–வது தி.மு.க. வட்ட செயலாளர் அரிமா ஆர்.என்.துரை செய்திருந்து, விழாவிற்கு தலைமை தாங்கினார்.
விழாவில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு 500 பேருக்கு பொங்கல் செய்வதற்கான அரிசி, வெல்லம், முந்திரி, நெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகளையும், 500 பெண்களுக்கு சேலைகளும், 300 இளைஞர்களுக்கு பேண்ட்–சட்டைகளையும் வழங்கினார்.
கனிமொழி பங்கேற்பு
விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கனிமொழி எம்.பி. பேசியதாவது:–
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தாய் வீட்டு சீதனம் போல், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்களும், சகோதரிகளுக்கும், பொங்கல் பரிசுகளை கருணாநிதி அள்ளி வழங்கினார். இப்போது தமிழகத்தில் மின்சாரம் எப்போது வரும், போவது தெரியாமல், குழந்தைகள் படிக்க முடியாமலும், பெண்கள் சமையல் வேலை செய்ய முடியாத அளவிற்கு மின்தட்டுப்பாடு இருக்கிறது. விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை இருக்கிறது.
உறுதி ஏற்க வேண்டும்
ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவுக்கு செல்ல பயமாக இருக்கிறது. அந்த அளவிற்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பஸ், பால், மின் கட்டணம் உயர்வால் தமிழகத்தில் விலைவாசி எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது உங்களுக்கே தெரியும். எனவே இந்த தை பொங்கல் பண்டிகை தமிழ்புத்தாண்டினை முன்னிட்டு தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி அமைந்து, தமிழகத்திற்கு விடியல் கிடைக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

No comments:

Post a Comment


Labels