வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



17/01/2013

தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை சார்பில் சென்னையில் பொங்கல் விழா!




தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை சார்பில் 2 நாட்கள் பொங்கல் விழா நடக்கிறது. தென் சென்னை மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் பொங்கல் விழா வியாழன், வெள்ளி என 2 நாட்கள் நடக்கிறது. மைலாப்பூர் மாங்கொல்லையில் மாலை 6 மணியளவில் நடைபெற்ற இந்த விழாவில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொண்டார்.
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். கவிஞர் கனிமொழி எம்.பி. முயற்சியால் தமிழ்பண்பாட்டின் அடையாளங்களாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தஞ்சை தேன்மொழி ராஜேந்திரன் கலைக்குழுவின் நையாண்டி மேளம் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில் கூத்து, ஜிக்காட்டம், சிலம்பாட்டம் மற்றும் பாடகர்கள் இளையராஜா, லட்சுமி ஒவியா ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சி, தேவராட்டம், தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

18-
ந் தேதி மாலை 6 மணிக்கு கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி, ஆயிரம் விளக்கு புஷ்பா நகரில் பொங்கல் விழா நடைபெறுகிறது

1 comment:

  1. நமது ஊரின் பெயரில் வலைத்தலம் தொடங்கி உள்ள ஷர்பு தீன் பாய்க்கு இனிய நல்வாழ்த்துக்கள்.. மெலும் உங்கள் வலைதலம் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள். தி.மு.க. செய்திக்கு மட்டும் முக்கியதுவம் கொடுக்கமால் நீங்கள் படித்த பல நல்ல செய்தியை உங்கள் வலைத்தலத்தில் எதிர் பார்கிறென்.....

    ReplyDelete


Labels