2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு! திமுக அறிவிப்பு!
2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்து திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:
டி.ஆர். பாலு, எம்.பி., (தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர்)
கனிமொழி, எம்.பி., (தி.மு.க. மாநிலங்களவைக்குழுத் தலைவர்)
ஆ. இராசா, எம்.பி., (தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர்)
திருமதி எஸ்.பி.சற்குணபாண்டியன் (தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்)
டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., (தி.மு.க. அமைப்புச் செயலாளர்)
திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் (தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்)
பேராசிரியர் அ. இராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment