பேராசிரியர் வருகை;
விழாவிற்குப் பெருமை!

அவரை இங்கே வரவேற்புரையாற்றவும், நம்முடைய அருமைப் பேராசிரியர்

அவரை இங்கே வரவேற்புரையாற்றவும், நம்முடைய அருமைப் பேராசிரியர்
அவர்களை தலைமையுரை வழங்கவும், என்னை ஏற்புரை ஆற்றவும்,
நீதியரசரை நூலினை வெளியிடவும், கவிப்பேரரசை அதனைப் பெற்றுக்
கொள்ளவும் ஏற்பாடு செய்து – இதற்கெல்லாம் காரணமான இந்த மேடையை
அமைத்து, இந்த விழாவை ஏற்பாடு செய்து, மற்றவர்களைப் போல தானும்
எதிரே அமர்ந்து உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கின்ற
கழகத்தினுடையபொருளாளர் தம்பி ஸ்டாலின் - அவரைப் போலவே
கழகத்தினு டைய பல்வேறு அமைப்புக்களினுடைய செயலாளர் கள்,
பொறுப்பாளர்கள் எல்லாம் இந்த நாளை நன்னாளாகக் கருதி, நான் எழுதிய
"நெஞ்சுக்கு நீதி’’ புத்தகத்தினுடைய ஆறாம் பாகம் வெளியீட்டு விழா விற்கு
வருகை
தந்திருப்பது என்னுடைய மகிழ்ச்சியை நூறு மடங்கு பெருக்கியிருக்கிறது.
அவர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கின்றேன். இந்த விழாவிலே நம்முடைய
பேராசிரியர் அவர்கள் கலந்து கொள்வாரோ இல்லையோ என்ற அய்யப்பாடு
இருந்து, அந்த அய்யப்பாட்டை அவரே இரண்டு நாட் களுக்கு முன்பு என்
இல்லத்திற்கு வந்து போக்கி, இன்றைக்கு அவரும் இந்த விழாவிலே கலந்து
கொண்டிருப்பது இந்த விழாவிற்கு மிக மிகப் பெருமை சேர்ப்பதாகும்.
No comments:
Post a Comment