வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



19/11/2013

கவிஞர் வாலி அவர்கள் கலைஞரை நினைவு கூர்ந்தார். கலைஞர் தனக்கு 40 ஆண்டுகால நண்பர் என்று குறிப்பிட்டார். அவரிடம்தான் நிறைய பரிசுகள் பெற்றிருப்பதை கூறி பெருமைப்பட்டு கொண்டார். தொடர்ந்து தன்னுடைய கவிதை ஒன்றை குறிப்பிட்டு பேசினார். நிஜ கோவிந்தா - என்று பஜ கோவிந்தா-வுக்கு பதிலாக வைத்த தலைப்பில், காஞ்சிபுரத்தில் கோயில் யானைக்கு தென்கலை நாமம் போடுவதா, வடகலை நாமம் போடுவதா என்ற சர்ச்சை, வழக்கு மன்றம் சென்று வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருக் கையில் அந்த யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி விட்டது. அப்போது யானைக்கு மதம் பிடித்ததால் ஓட வில்லை. மதம் பிடிக்காததால் ஓடிவிட்டது - என்று எழுதியதைக் குறிப்பிட்டதும் வெடிச் சிரிப்பும், கைதட்டலும் ஒருங்கே எழுந்தது. அந்த வெடிச்சிரிப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சிரிப்பு வெடியை எடுத்து போட்டார் கவிஞர் வாலி.

அதாவது தனக்கு பரிசளிக்க இருந்த கலைஞர் இந்த கவிதையை சுட்டிக்காட்டி, இந்த ஒரு கவிதைக்கே லட்ச ரூபாயை பரிசாகத் தரலாம் என்று அறிவித்ததையும், தொடர்ந்து கலைஞர், இதையே நான் எழுதியிருந்தால் சோ வென்று மழை பெய்திருக்கும் என்று குறிப்பால் உணர்த்திச் சொன்னதாக சொன்னவுடன் சிரிப்பும் கை தட்டலும் இடி மின்னலுடன் மழையாக பொழிந்து அரங்கை அதிர வைத்தது.

 

No comments:

Post a Comment


Labels