வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



01/04/2017

டெல்லியில் மு.க.ஸ்டாலின்: விவசாயிகளை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு


டெல்லி சென்றுள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும் சென்றார். திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோரும் உடனிருந்தனர். 


தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 19வது நாளாக இவர்களின் போராட்டம் நீடிக்கிறது.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று காலை டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலின் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக நேற்று திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 

No comments:

Post a Comment


Labels