வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



24/10/2013

குடும்ப அரசியல் பற்றி அமைச்சர் ஆ.ராசா குமுதம் ரிப்போர்ட்டரில்

ஏற்கெனவே அவர் குடும்பமே இயக்கம்தான். மிசா காலத்தில் கலைஞர் முரசொலியைக் கையில் எடுத்துக் கொண்டு சாலையில் நடந்தபோது ஜனநாயக உரிமைகளுக்காகப் பாடுபட்ட போது அந்தக் குடும்பத்தில் இருந்தவர்கள் _ அது சிறைக்குப் போன தளபதி ஸ்டாலினாக இருந்தாலும் மு.க. அழகிரியாக இருந்தாலும் மு.க. தமிழரசுவாக இருந்தாலும் அவர்களும் தெருவுக்கு வந்து அவசரச் சட்டத்தை _ போலீஸ் அடக்கு முறையை எதிர்த்து ஜனநாயகத்தைக் காக்கப் போராடினார்கள்; ஆனால், இன்றைக்கு அரசியலுக்கு வரும்போது அல்லது துணையாகப் பணியாற்றும் போது, ‘இவர்கள் வரலாமா?’ என்று கேட்கிறார்கள். இன்னொன்று, நான் ஓர் அரசியல் கட்சியில் இருப்பதாலேயே என் பிள்ளையை நிராகரிக்க வேண்டுமென்று சொல்வது என்ன நியாயம்? என்ன கொள்கை? தி.மு.க.வில் உள்ள ஒருவரின் மகன் தி.மு.க.வில் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலா சேரமுடியும்? மோதிலால் நேரு நேருவையும், நேரு இந்திராவையும் கொண்டு வரக்கூடாது என்று காங்கிரஸிலோ, மக்களிடத்திலோ விவாதம் நடந்ததாகத் தெரியவில்லை. இவையெல்லாம் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அப்படியே ஒரு வாரிசு திணிக்கப்பட்டால், அல்லது வெளியிலிருந்து நடப்பட்டால் அதை நிராகரிப்பதா, ஏற்றுக் கொள்வதா என்பதை கட்சித் தொண்டர்கள்தான் முடிவு செய்ய முடியும். ஊடகங்களும் மற்ற விமர்சனமும் அல்ல. வாரிசாக வந்த எத்தனையோ பேர் வெற்றியடையவில்லையே!’’

No comments:

Post a Comment


Labels