வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



14/10/2015

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்... உங்கள் குறைகள் தீரும்.... பெரம்பலூரில் ஸ்டாலின்   


 
 

     பெரம்பலூர்: திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்களைப்போன்ற எண்ணற்ற பட்டதாரிகளின் வேலை வாய்ப்பை உங்கள் துணையோடு நிறைவேற்றுவோம் என்று பெரம்பலூரில் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.பெரம்பலூர் அருகே லப்பைக்குடிக்காட்டில் திமுக பொருளாளர் ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டார். பொதுமக்கள், வணிகர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் மேற்கு ஷாமியா பள்ளிவாசலில் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் சந்தித்தார்.திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர் குழு பெண்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று பெரம்பலூரில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தமிழக வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், வெளிப்படையான நிர்வாகம் என்ற மாற்றத்தை உருவாக்கிடும் நோக்கத்துடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை கடந்த செப்டம்பர் 20ம் தேதி கன்னியாகுமரியில் துவக்கி திருச்சி வரை 11 மாவட்டங்களுக்கு சென்று முதல் கட்ட பயணத்தை நிறைவு செய்தார்.2ம் கட்ட சுற்றுப்பயணத்தை கடந்த 7ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் துவக்கிய மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார். நேற்று அவர் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து தங்களது கோரிக்கைகள், குறைகள், குமுறல்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சுய உதவிக்குழுக்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment


Labels